Anbin Vaasale lyrics

  2024-07-01 10:29:18

Anbin Vaasale lyrics

நீயில்லையேல் நான் என் செய்வேன்

நீயில்லையேல் நான் என் செய்வேன்

அன்பின் வாசலே அன்பின் வாசலே

எனை நாளும் ஆளும் உறவே

மீண்டும் கண்டோம்

வாழும் காலம் முழுவதும்

உனதே என்போம்

நாளங்கள் ஊடே உனதன்பின் பெருவெள்ளம்

மீண்டும் நீ உயிர்த்தெழுகிறாய்

நீயே எமது அன்னமாக

நீயே எமது எண்ணமாக

உணர்ந்தோமே மெய் மறந்தோமே

நிறைந்தோமே மனம்

விரிந்தோமே ஆசை இயேசுவே

மீண்டும் உன்னை தரிசித்தோம்

உன் பாதம் பரிசித்தோம்

உம்மில் எம்மை கரைகிறோம்

வான் மண் நீர் தீ எல்லாம் நீதானே

சீற்றம் ஆற்றும் காற்றும் நீ தானே

கண்ணீரை தேக்குமே

என் பேரை சொன்னால்

பூ பூத்திடாதோ

எனை நாளும் ஆளும் உறவே

மீண்டும் கண்டோம்

வாழும் காலம் முழுவதும்

உனதே என்போம்

நாளங்கள் ஊடே உனதன்பின் பெருவெள்ளம்

மீண்டும் நீ உயிர்த்தெழுகிறாய்

பூவின் மேலே வண்ணம் நீதானே

வேரின் கீழே ஜீவன் நீதானே

நீயே எமது அன்னமாக

நீயே எமது எண்ணமாக

உணர்ந்தோமே மெய் மறந்தோமே

நிறைந்தோமே மனம்

விரிந்தோமே ஆசை இயேசுவே

மீண்டும் உன்னை தரிசித்தோம்

உன் பாதம் பரிசித்தோம்

உம்மில் எம்மை கரைகிறோம்

உம்மில் எம்மை கரைகிறோம்

உம்மில் எம்மை கரைகிறோம்

See more
Haricharan more
  • country:India
  • Languages:Tamil, Malayalam
  • Genre:Singer-songwriter
  • Official site:
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Haricharan
Haricharan Lyrics more
Haricharan Featuring Lyrics more
Excellent recommendation
Popular
Copyright 2023-2024 - www.lyricf.com All Rights Reserved